102 அறிஞர் அண்ணா பணியினில் வழுவிடான் உழவன், செந்நெல் மணியினை அடித்தெடுத்துக் களஞ்சியம்தனில் சேர்த்திடும் வரையிலே, தான் மேற் கொண்ட பணியினின்றும் வழுவிடான்! உழைப்பு முயற்சி தேவை வாழ்க்கைக்கு வளமான பொருள்களைச் சிறிதும் வாட்டமின்றிப் பெற முடியாது; இவற்றைப் பெற ஓயாத உழைப்பும் சலியாத முயற்சியும் வேண்டும். - வேலை நிறுத்தம் விம்மலின் எதிரொலி ! . வேலைநிறுத்தம் என்பது, தொழிலாளியின் வீம்புப் போராட்டமல்ல! இரத்தக் கண்ணீர் வேதனைப் புயல் - - அவனுடைய அவனுடைய இல்லத்திலே குமுறியெழும் விம்மலின் எதிரொலி! தொழிலாளர் உலகில் வேலைநிறுத்தம், வெறும் பொழுது போக்கு அல்ல; ஆபத்துக்குத் தாமதமாக அச்சாரம் தரும் துணிவு பிறந்த நிலைமை; அந்தத் துணிவும் எளிதில் ஏற்பட்ட சிறிய சம்பவமல்ல தாங்க முடியாத வறுமையின் விளைவு! பணக்காரன் பொதுவுடைமைவாதிகட்கு, முதலாளி யார்?' என்பது புரியவில்லை தெரியவில்லை; சரிவரப் புரிந்துகொள்ள மனமுமில்லை; 'பணக்காரன்தான் முதலாளி' என்று அவர்கள் தவறாகக் கருதுகின்றனர்; பணக்காரனுக்கும் முதலாளிக்கும் உள்ள வேறுபாட்டை pol அவர்கள் அறியவில்லை! பணக்காரன் முதலாளி அல்ல; பணக்காரன்- குளம் குட்டைகளுக்குச் சமமானவன்; முதலாளி-ஆற்றுக்குச் சமமானவன்; மழை பெய்தால்தான் குளம்-குட்டைகளில் நீர் இருக்கும்--இன்றேல் வற்றிவிடும்; ஆனால் ஊற்றோ