பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

13-1-39 - தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் இரங்கற் கூட்டத்தில் உரை
18-1-39 - தமிழர் திருநாள் உரை நிகழ்த்துதல்.
10-2-39 - சென்னை கிறித்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர்
6-1-40 - பம்பாயில் பெரியார் - அம்பேத்கார் உரையாடல் மொழிபெயர்ப்பு
2-6-40 - காஞ்சியில் திராவிட நாடு பிரிவினை மாநாடு
7-3-42 - 'திராவிடநாடு' கிழமை இதழ் தொடக்கம்
14-3-43 - சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமாயணச் சொற்போர்.
5-6-43 - 'சந்திரோதயம்' நாடகம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடத்தல்.
19-8-44 - சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு அண்ணாதுரை தீர்மானம் நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் பெற்று மக்கள் இயக்கமாக மலர்தல்.
15-12-45 - 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' நாடக அரங்கேற்றம் - அண்ணா நடித்தல்.
மே 1946 - கருஞ்சட்டைப்படை மாநாடு - தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு
29-7-46 - நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தருக்குப் பொற்கிழி வழங்கல்
25-4-47 - 'வேலைக்காரி' நாடகம்.
1-6-47 - 'நீதிதேவன் மயக்கம்' நாடகம்.
15-8-47 - ஆகஸ்டு பதினைந்து 'விழா நாளே' என விளக்கம் தருதல்.