உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 71
என்றார்; நான்தான், 'ஆதரவு தந்தாக வேண்டும்' என்று கூறினேன்; அப்போதே கூட, எனக்கும்-பெரியாருக்கும் கருத்து வேறுபாடு!
இப்படி, கம்யூனிஸ்டுகள் முன்னின்று நடத்தினர் தொழிலாளர்கள் உறுதியுடன் நின்றனர்-நாம் துணை நின்றோம்; என்றாலும் அந்த வேலை நிறுத்தம் முறியடிக்கப் பட்டது எதனால்? எப்படி?
இதை நான் அப்போதே நண்பர் ஜீவானந்தத்திடம் கூறினேன்; அவர், 'அண்ணாதுரை - நீ ஒரு அவசரக்காரன்' என்று கூறிவிட்டார்!
அன்று நடுத்தர மக்களையே, 'வேண்டாம்; அவர்களின் ஆதரவே தேவை இல்லை' என்று பேசியவர்கள், இன்று 'பிர்லாவே வருக; கேரளத்தில் தொழிற்சாலைகளை அமைத்துத் தருக' என்று பேசுகிறார்கள்.
அன்று, 'நெடுஞ்செழியனைச் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்றேன்; 'கூடாது; இவர்களெல்லாம் மத்திய தர வகுப்பினர்; இவர்களைச் சேர்த்துக் கொண்டால், தொழிலாளர் இயக்கத்தின் தூய்மை கெட்டுவிடும் என்று பேசினார்கள். இன்று பிர்லாவையே அழைக்கிறார்கள்!
காரணம் கேட்டால், 'தொழிற்சாலையை நிர்வகிப்பது எப்படி என்பதைக் கற்றுத் தருவதற்காகவே அழைக்கிறோம் என்கிறார்கள்!