ஆனை விழுங்குகிற அம்மையாருக்கு. பூனை சுண்டாங்கி. ஆன விழுந்தாற் கொம்பு, புலி விழுந்தாற் றோல். ஆனை வேகம் அடங்கும். அங்குசத்தில் இகழ்ச்சி யுடையோன், புகழ்ச்சி யடையான். இக்கரை மாட்டுக்கு, அக்கரை பச்சை. இக்கரையில் பாகலைப்போட்டு, அக்கரையில் கொழுக் கொம்பு வைக்கிறான். இங்கிதந் தெரியாதவளுக்கு, சங்கீதந் தெரிந்து பலனென்ன? இங்கும் புதைய லிருக்குமா றெங்கா? அதுக்குச் சந்தேகமா வெங்கா? இசலிக்கொண்டே, என்னோடே நிற்கிறான். இசைவில்லாப் பாட்டு. இழுக்கு. இசைவு வந்தது. வட மலையப்பா. இச்சித்த காரியம், இரகசியமல்லவோ? இச்சைக்சொல் யாசகத்தால், இடர் பட்டவ னில்லை. இச்சையு மில்லை, கிருபையு மில்லை. இஞ்சி தின்ன குரங்குபோற் பஞ்சரிக்கிறான். இஞ்சியென்முற் றெரியாதா, எலுமிச்சம்பழம் போல் தித்திப்பா யிருக்குமே ! இடக்கனுக்கு வழி யெங்கே? கிடக்கிறவன் தலைமேலே. இடங் கொடுத்தால், மடம் பிடுங்குவான். இடது கைக்கு வலது கை துணை, வலது கைக்கு இடது கை துண. இடது கை, புட்டத்துக் கெளிது. இடம் வலம் தெரியாதவனோடு, இணக்கம் பண்ணக் கூடாது. இட வசதியில்லாத. பதிவிரதை / டெறின காலிலேயே. இடறுகிறது. இடிகொம்புக் காரன் கோழி, குசுச்சத்தத்துக்கஞ்சுமா? இடிக்கு, குடை பிடிக்கலாமா? இடித்தவள் புடைத்தவ எங்கேயிருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக் கொண்டுப்போனாளாம்! 29