பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ανασπού [75] உத்தர வாக வேண்டுமென்றோதினர்: "சற்றுப் பொறுக்க எனக்கை காட்டி முற்றிய வேடர் மோனங் கொண்டுபின் 'முருகா முருகா என்று மொழிந்தனர். 'அருளுக முருகா அருளுக எனக்கனிந் 60 திருமொழிப் புலவர் இயம்பக் கேட்டுக் "கடம்பன் கட்டளை கதிர்செலும் மாலை வெளியிடப் படுமென விளம்பினர் பத்தர் பகலுண வுண்டு பத்தர் உறங்கி மிகமகிழ்ந் தெழுந்து மேலவர் கோலம் 65 தாங்கி வந்து தரிசனம் தந்தனர் ஆங்கவர் வருங்கால் ஓங்குயர் வடமொழி பாங்குடன் அறிந்தவர். பண்டித மணியுடன் கலந்துரையாடியிருத்தலைக் கண்டே உளந்திறந்தாட அவர்இடையூறாய் 70 இருத்தலைக் குறிப்பால் உணர்த்தினர் பத்தர்: வடமொழி யாளர் படர்ந்ததற் பின்னர் தடநுதல் நீற்றினர் தனித்துப் பேசினர்: 'முருகா முருகா முகவை நகருக் கருகே அமைந்த சிற்றுர் இவனுர்: 75 நெடுநாளாக இவன்மனம் நினைந்து படருமோர் ஆசை பற்றி யுள்ளான்; இரந்து பெறாமல் இருக்கும் பொருளால் உரங்கொளும் வேலற் கொருபெருங் கோவில் எழுப்பும் ஆசையால் இருந்தஐ யாயிரம் BO முழுக்கத் தீர்ந்தும் முற்றுப் பெற்றிலாச் செயலால் வருந்திச் சேவற் கொடியோன் செயலே யாக எனஇவன் நினைந்து முருகன் தலைமேற் பொறுப்பை ஏற்றி வரும்நாள் ஒருநாள் வடிவேல் முருகன் 85 கனவில் தோன்றிக் கவலை கொள்ளேல் எனக்கோர் ஆலயம் எடுக்க நினைந்தனை மனத்தெழும் ஆசைக்கு மற்றவரிடத்தே இரந்து பொருள்பெறல் இழுக்கென எண்ணினை உறுதிப் பாட்டினை உளத்தாற் போற்றினேன்; Q()