பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_பகே.யல் ஆறு முழத்தின் ஆழம் அமையச் சோருத லின்றித் தோண்டுக, அதனுட் செம்பொன் இலதேல் செய்தஅக் குழியுள் அன்பின் வந்த அடியவன் அவனைச் சீவன் முத்தி சேர்பயன் என்று யாவரும் போற்ற ஆவியோ டிறக்கி முறையாற் சமாதி முற்றுறக் கட்டி இறையோற் கெழுப்பும் கோவிலும் எடுத்து நினது கையால் நித்திய பூசையும் இயற்றுக’ என்றோர் ஆணையிட்டனன் முருகன் ஆணையை முடிமிசைக் கொண்டு கருதி நடக்குங் கடப்பாடுடையேன். ஐய நீவிரும் ஐயுறல் விடுத்தும் தளர்ந்து பின் வாங்குதல் தவிர்த்தும் இதனை அங்கீகரித்துடன் அருளுதல் வேண்டும்' இங்ங்ணம் புலவர் இசைத்தது கேட்டுத் துங்க முகமும் துவண்டது. வாயும் மலரா திருந்தது. மற்றவர் நிலையை நோக்கிய புலவர், நோன்பிற் பெரியீர்! ஆக்கிய தவப்பயன் வாய்த்தது போலும், ஒள்வேல் முருகன் உகந்த வெள்வேல், தலத்தின் விருட்சம் ஆகித் தழைக்க அந் நிலத்திடைக் கோவிலும் நிமிர்ந்தெழு மாகின் அளப்பில் தவமே ஆர்க்கது வாய்க்கும்? மலைத்தல் தவிர்க மற்றுண வுண்டு மாலைப் பொழுதில் வந்தருள் புரிக என்றதும் சாமிகள் எழுந்து நடந்தனர். மாலை வந்தது மாதவர் வந்திலர். கந்தன் பெயரால் கயிறு திரித்தவர் 'அந்தர்த்தியானம் ஆகினர் அன்றே -அஆகு 81 260 265 270 275 280