பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 வழக்காடு காதை "கலையறி வார்ந்த நெஞ்சிற் கருவுறும் கவிதை எண்ணம், புலமையிற் செறிந்த பாடல் புதல்வனாய் வந்து தோன்றும், கலையது கருக்கொள் ளாராய்க் கருவினை உயிர்க்க எண்ணின் நலமுறும் மகவா தோன்றும்? நகைப்பன்றோ வந்து தோன்றும்' “நிறைபுலம் செழிக்கப் பெற்றோர் நிலையுறும் பாடல் யாக்கும் முறைகளும் தெரிதல் வேண்டும் முற்றிய புலமை என்றால் நெறிபிற ழாத பாடல் நெய்திடுந் திறமை வேண்டும். நெறிபெறுந் தமிழ்த் தொண் டாக நினைத்திதைச் செய்க என்பார். பிழைபடப் பாடல் யாத்தல் பீடுயர் தமிழ்மொ ழிக்கே அழிவிலாப் பழியை ஆக்கும் ஆதலின் நண்பரேனும் வழுவுறும் பாடலொன்றை வடிப்பினும் வெகுண்டு ரைப்பார் "இழிவுறும் செயலைச் செய்ய இனியும்நீர் முயலேல்’ என்பார்.