பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வம்பே யில்லை என்றுரை வழங்க அன்றவரிருவரும் சிரித்தனர் ஆங்கே ா மற்றொரு மேடையில் சொற்ற மொழியில் உற்றநகைச் சுவையை ஒர்ந்து தெரிக; "ஒருநாள் இரவில் உறுதுயில் கொள்ள அரவணி பெருமான் கனவிடை வந்தார்; பெருமகிழ் வுற்றுநான் ஒருவரங் கேட்டேன்: இறைவன் என்பால் இன்முகங் காட்டித் 'தந்தம் உமக்குப் போமெனச் சாற்றினர்: தந்தோம் உமக்கெனச் சாற்றினர் என்று சிந்தையில் மகிழ்ந்தேன் வந்தது விடியல் கனவும் வரமும் பலித்திடக் கண்டேன் ஆம்ஆம் பற்கள் அனைத்தும் விழுந்தன: எனலும் அவையோர் எழுப்பினர் நகையே ப. தமிழோ டாங்கிலந் தக்கவா றுணர்ந்தோர் அமிழ்தெனப் பொழியும் ஆற்றலர் ஒருவர் அமெரிக்க நாட்டில் ஆங்கிலக் கவிஞர்என் Ł றெமருக் குரைப்பேன்’ என்றொரு மேடையில் சொற்பெருக் காற்றினர் மற்றது முடிந்ததும் முடிப்புரை தொடுக்கும் வழக்கினை விடுத்துத் தமிழறி புலவர் தக்கவாறுரைத்தனர்: இன்றுநான் கேட்க இன்னுரை வழங்கியோர் இடைவேளை படைக்கும் இடைவேலை எனக்குத் தராது முடித்துத் தந்தனர் என்றுதாம் ஆங்கிலம் பயிலா அத்தகு நிலையைப் பாங்குடன் குறிப்பாற் பகர்ந்தது கேட்டு நினைந்து மகிழ்ந்தது நீடிய அவையே. ப ஊன்றிய கோலின் உறுதுணை யதனால் ஆன்றவர் தளர்வுடன் அவர்தம் மனையில் ஈண்டிய படிகளில் இறங்குங் காலை தந்தோம் பல்எனவும் பொருள்படும். "இடையில் முடிவுரை வழங்கும் வேலை. ' Tojo, கவியரசர் முடியரசன் படைப்புகள் : MI) M". 5s) 60 65