பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 3 () கவியரசர் முடியரசன் படைப்புகள் நன்றெனக் கண்டதை நற்றமிழ் மொழியிற் பெயர்ப்பான் வேண்டிப் பேரிடர்ப் படுவார் உயிர்ப்பார் அவர்தாம் உயரிய தாய்மொழி கல்லா ராகிக் கலங்கி நின்று பொல்லா நடையாற் புனைகுவார் தமிழென. எதையும் ஏற்கும் இளகிய தமிழகம் அதையும் ஏற்கும் அமைதியின் நின்றே பண்டித மணியார் பைந்தமிழ்ப் பயிற்சியும் பண்டை வடமொழிப் பயிற்சியும் ஒருங்கே கொண்டவராதலின் கூர்ந்தநன் மதியால் வளம்பெறு தமிழில் வடமொழி நூல்களைத் திறம்படப் பெயர்த்துத் தென்மொழி வளர்த்தார். மொழிபெயர்த் துதவலும் முன்னையர் கண்ட மொழிப்பணியாகும் எனவே முனைந்து தேர்ந்து சிலநூல் தெள்ளிய தமிழில் ஒர்ந்து மொழிபெயர்த்துதவினர் இவரே. தலைப்படு செல்வ வளத்தவன் ஆயினும் இலக்கிய ஆர்வலன் மொழிச்சுவை தேர்ந்தவன் நாத்திறம் பெற்றவன் நற்புகழ் உற்றவன் சூத்திர கனெனச் சொலப்படும் அரசன் யாத்ததோர் நாடக நூலினைப் பெயர்த்துப் பண்ணுயர் தொழில்வலார் மண்ணியல் சிறுதேர் எண்ணும் வகையால் இயற்றித் தந்தனர் ஒவ்வோர் உறுப்பும் செவ்விதின் அமைந்து கவ்வும் எழிலாற் காண்பவர் உளத்தை ஈர்த்திங் குலவிய தத்தேர் பார்த்தவர் வழங்கினர் பாராட் டுரையே: தச்சிட்டுச் சூத்திரகன் செய்த ளித்து தனிநெடுந்தேர் நிலைபெயரா தங்கு நிற்க, அச்சிட்டுப் பூணிறுவி ஆர மெல்லாம் அழகுறுத்துத் தமிழகத்தில் ஒட்டு வித்தான் 'யூனிறுவி- பூண் நிறுவி ()() Կ, 100 105 110