பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊன்றுகோல் 133 தரைமகிழ அளித்ததிரு வாசகத்துள் தனிநிலையிற் றோய்ந்து தோய்ந்து நெறிமுறையில் உரைதந்தார் அவ்வுரையின் * நிலையுரைக்க எவரால் ஒல்லும்? 2 அணுவுக்குள் மறைந்திருக்கும் ஆற்றலினை அளந்தறிய வல்லார் போலக் கணுமிக்க கரும்புநிகர் சொல்லுக்குள் கரந்திருக்கும் பொருளெடுத்த துணிவுக்கு வியந்துலகம் போற்றியது சொலற்கரிய புலமை யுற்ற திணிவுக்கு வாழ்த்தியது வாசகத்தின் தெளிவுக்குள் திளைத்து நின்றே. 5 கண்டுநிகர் சொல்லுக்குள் கடைந்தெடுத்துக் காணுகின்ற நயங்கள் சொல்லி மண்டுமதன் சுவைசொல்லி முறைவைப்பில் மருவிவரும் நோக்கம் சொல்லிக் கண்டபிற ஒப்புமையும் உடன்சொல்லிக் காட்டிவரும் புலமை யாலே பண்டையுரை யாசிரியர் வரிசைபெறும் பண்டிதராய் விளங்கி நின்றார். M