பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கவியரசர் முடியரசன் படைப்புகள் : 'ஊன்றுகோள் நமது ளத்தில் ஒவ்வொன்றும் மணிகளாகும்: ஊன்றிநாம் எண்ணி யெண்ணி உருப்பெற உழைத்தல் வேண்டும். 'அயன்மொழிப் பயிற்சி அன்னை மொழியிடம் அன்பைக் கூட்டப் பயன்படும் எனினும் இந்தி பயின்றிட வற்புறுத்தின் இயல்பினிற் றமிழ்வளர்ச்சி தடைப்படும் ஏற்றங் குன்றும் மயலுளார் திணிப்பராயின் வருபயன் இல்லை என்றார். 'உரியதன் மொழியில் ஆக்கம் உயர்ந்திட ஒம்பிக் காத்துத் தெரிதருஞ் சுவையை மாந்தத் தெரிகிலா நாடு தானும் பெரியதே எனினும் யாவும் பின்னடைந்தழியும் உள்ள பெருமையுந் தேயும்’ என்றே பேசினர் மதியா லாய்ந்து. 'தாய்மொழி என்று சொல்லும் தனிமொழி எதுவோ அந்தத் தூய்மொழி வாயிலாகத் தொடங்கிடும் கல்வி தன்னைச் சேய்களும் முதற்கண் கற்றுத் - தெளிந்திடல் வேண்டும் இன்றேல் தேய்வுறும் அறிவென் றெண்ணித் தேர்ந்தவர் தெளிந்து சொன்னார். 'ஊண்றிய கொள்கை | | |[]