பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையயில் காதை திண்ணையிற் பள்ளி வைத்தே தெளிவுறக் கற்கக் கல்விப் பண்ணையென்றதனைக் கொண்டே பயின்றனர் அற்றை நாளில்: எண்ணுடன் எழுத்தும் மண்ணில் ஏட்டினில் எழுதி ஒதிக் கண்ணென மதித்துப் போற்றிக் கல்வியை ஒம்பிக் காத்தார் பலர்புகழ் கல்வி கற்கப் பச்சிளஞ் சிறுவர் எல்லாம் புலருமுன் விழித்துக் கொள்வார் புள்ளெனப் பறந்து செல்வார். மலர்விரல் கொண்டு மண்ணில் வடிவுற எழுதிக் காட்டி அலர்சிறு வாயால் ஒதி அவரவர் முறைவைப் பாரே எழுத்தறி வித்த ஆசான் இறைவனென் றெண்ணி வந்தார் பழுத்தநல்லறிவும் அன்பும் பண்புடன் கருணை நெஞ்சும் வழுத்திடுந் தோற்ற முங்கொள் வானவன், பயில வந்தோர் தழைத்திடல் ஒன்றே கொண்டு தண்ணளி சுரப்பன் நன்றே கொள்வான் அவன்.