பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

δυνασπoυ 6 | | உள்ளத்துள் உணர்வூட்டிப் பற்றுண் டாக்கி, உண்மைபெறும் பத்தியுடன் தொண்டு செய்ய மெள்ளத்தன் னாளாக்கிப் பாடல் வல்ல மேலவர்தம் கூட்டத்துள் ஒருவனாக்கி, அள்ளித்தன் அருளெல்லாம் என்மேற் பெய்தாள் அழியாத வரமளித்தாள் தமிழ்த்தாய்; அந்தத் தள்ளைக்கு நானடிமையான திந்தச் சன்மார்க்க சபையென்னுங் கோவி லிற்றான் 32 நலந்தந்த சங்கரரும் 'ஆட்டு வித்த நடேசருமென் தெய்வங்கள். நாளும் நாளும் வலம் வந்தே அருள்பெற்ற கோவிலுக்குள் மல்லிங்க சாமியொரு சாமி, எற்குக் குலந்தந்த தமிழ்தந்த முத்து சாமி கும்பிட்டு நான்மகிழ்ந்து நத்துஞ் சாமி. உளம்தந்து பாருலகின் இயல்புங் காட்டி உய்வித்த செல்லப்பர் மற்றோர் தெய்வம் 55 கதிர்மணிபாற் கற்றுணர்ந்த தலைமாணாக்கர் கான்முளையாய் அவர்க்குப்பின் விளக்குஞ் செம்மல் புதுமுறையாற்றமிழாயும் புலமை யாளர் போதுமெனும் மனங்கொண்டு வாழும் நல்லர் இதுசரியென்றவர்மனத்திற் கொள்வராயின் எப்பொருட்டும் பிடித்தபிடி விடாத நெஞ்சர் முதுபுலவர் ஏற்றிருந்த சபைப்பொறுப்பை முற்றுணர்ந்த மாணிக்கம் ஏற்றுக் கொண்டார் o, M. பொருட்டுறையில் சபைதளரும் நிலையறிந்து பொறுப்பேற்ற மாணிக்கம் கல்விக் கீயும் அருட்கொடையோர் இவ்வுலகில் இன்று முள்ளார் ஆதலினால் திரட்டுதும்யாம் எனத்து னிந்து மருட்கடலுங் கடந்துபொருள் தொகுத்து வந்து வளர்க்கின்றார் மாணிக்கத் தூணாய் நின்று: திருச்சபையும் சீனிதுணை யாகி நிற்கத் திருக்குறள்போல் தன்னிறைவாற் பொலிதல் கண்டோம் 35 -அஆஅ -n. சங்கரநாராயனப்பிள்ளை, நடேசஐயர், மல்லிங்கசாமி, முத்துசாமிப்புலவர். வீர.செல்லப்பனார் வர்கள் அசிரியர்கள். கணைவேந்தர் வ.சுபமா. பழநியப்பர் பெயரர் சீனிவாசன் ஆ ğ] நத ழந்