பக்கம்:ஊரார்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

குமாருக்கு எதுவும் புரியவில்லை.

“வனஜா அடிக்கடி வாயிலெடுக்கிறாங்களே, ஏன்?” என்று மட்டும் யோசித்தான்.

“அப்ப நான் வரட்டுமா?”

சாமியார் கிளம்பி வாசல் வரை போய்விட்டார். வேதாசலம் அவரைத் தொடர்ந்து போய், “சாமி, சங்கதி யாருக்கும் தெரியக்கூடாது. ஜாக்கிரதை. மானம் போயிடும்” என்று ரகசியக் குரலில் எச்சரித்து அனுப்பினான்.

ட்டிலில் உட்கார்ந்திருந்த சாமியார் நெற்றியில் ‘பட்’ என்று அடித்துக் கொண்டார்.

“ஏன் அடிச்சுக்குறீங்க!” குமாரு கேட்டான்.

“கொசு கடிக்குது.”

“வாச் ஏது?”

“உங்க மாமன் கொடுத்தான்.”

“எங்க மாமா நல்லவரு!”

“குமாரு, உனக்கு வெவரம் தெரியாதுடா? உன் மாமன் இந்த வாச்சை எனக்கு ஏன் கொடுத்தான் தெரியுமா?”

“ஏன்?”

“லஞ்சம். அந்த ரகசியத்தை நான் வெளியே சொல்லக்கூடாதாம். சொன்னா உங்க மாமன் என்னை ஊரை விட்டே தொலைச்சுப்புடுவான்...”

“எனக்குத் தெரியணும்...”

“தெரிஞ்சாலும் புரியாதுடா!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/17&oldid=1310405" இலிருந்து மீள்விக்கப்பட்டது