பக்கம்:எக்கோவின் காதல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

"எக்கோவின் காதல்" என்ற இந்நூல், என் தந்தையார் அவர்களால், 1947 - 48 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். வெறுங் கதைகளாக இல்லாமல் சமுதாயச் சீர்திருத்த நோக்கில் புனையப்பட்டவை இவை. இச்சீர்திருத்தச் சிறுகதைகள், அக்காலத்திய இதழ்கள் பலவற்றில் வெளிவந்தன ஆகும்.1958இல் அச்சு வடிவாயிருந்த இந்நூலுக்கு என் தந்தை எழுதியிருந்த முன்னுரையை அப்படியே கீழே தந்துள்ளேன்

"தொடக்கத்திலிருந்தே கவிதை எழுதிக் கொண்டிருந்த என்னைக் கதை எழுதுமாறு நண்பர் அறிவழகன் திசை திருப்பி விட்டார். இது 1947 ஆம் ஆண்டு நடந்தது. இரண்டாண்டுகள் எழுதினேன். அப்போது பல்வேறு இதழ்களில் இக்கதைகள் வெளி வந்தன. சீர்திருத்தக் கருத்துகளுக்கு வலுவூட்ட வேண்டுமென்று கருதிக் கண்ணெதிரில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையே அடிப்படையாகக் கொண்டு இக்கதைகளைப் புனைந்தேன். மைதாம் அச்சு வடிவம் பெறுகின்றன. பின்னர் இயல்பாகவே என் மனம் விரும்பிக் கொண்டிருந்த கவிதையுலகிற்குத் திரும்பி விட்டேன். அக்கனவுலகம் ஒரு தனி இன்பம் தருவதால், அதனை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறேன். அன்றிருந்த என் மொழி நடைக்கும், இன்றுள்ள நடைக்கும் உள்ள வேறுபாட்டை நன்குணரலாம்."

மார்ச், 1958.

அன்பன்,
முடியரசன்.