இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர் : கருமைச் சிறுகுயில் நீ
காகம் போல்இருந்தும்
அருமைக் குரலுனக்கே
அமைந்த தெவ்வாறே ?
குயில் : குணம்போல் குரல்அமையும்;
கோபம் தாபங்கள்
கணமும் வாராமே
காப்போர் பெறுவாரே.
சிறுவர் : என்றும் இனிமையுடன்
இசைக்கும் சிறுகுயிலே!
உன்றன் குணம் அமைய
உரைப்பாய் வழிஎமக்கே.
குயில் : இன்சொல் இயம்பிடுவீர்;
ஏதம் நினையாதீர்;
புன்சொல் புகலாதீர்;
போதும் சிறுவர்களே.
சிறுவர்: பொன்போல் போற்றிடுவோம்
புனிதச் சிறுகுயிலே!
அன்பால் நீயுரைத்த
அருமை மதியினேயே.