பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

38. கரிகால் வளவன்

 திங்கள் தோறும்
மும்மழை பொழியும்
திருமலி தமிழ்நாட்டில்
பொங்கும் மகிழ்வால்
பொற்புற ஆண்டனர்
புகழ்மலி மூவேந்தர்.1
சேரன் சோழன்
பாண்டியன் என்றே
செப்புவர் அவர்தம்மை
ஆரும் நிகரே
இலைஇலை எனவே
ஆண்டனர் அவனியினை.2
சோறும் நீரும்
மிகுந்திடு நாடாம்
சோழர்தம் நன்னாடு
பேறும் பெருமையும்
பெற்றிட ஆண்டவர்
பெருவளச் சோழியர்கள்.3

47