பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

.சி. என். அண்ணாதுரை 109 சுதந்திரம் கிடைத்தபின், உத்தமர் காந்தியடிகளே சொன்னார் — சுதந்திரத்தில் ஒரு கட்டத்தைத்தான் தாண்டி யிருக்கிறோம்; இந்தச் சுதந்திரம், ஏழை மக்களின் வாழ்க் கையை மாற்றக் கூடியதாக அமையவேண்டும்' என்று. அவர் வெளியிட்ட அதே கருத்தைத்தான், நானும் கூறுகிறேன்: களிப்படைய வில்லை. கவலை கொள்ளு கிறேன் !" என்றார். அதுதானே. நிலையும்!

சுதந்திரம் காகிதப் பூவாக இல்லாமல், மணமுள்ள பூவாக இருக்கவேண்டுமானால் மாற்றுக் கட்சிகள் யாவும் வந்த சுதந்திரத்தை அனுபவிக்கும் சந்தர்ப்தம் அளிக்கப் படவேண்டும். யாரைப் பார்த்தாலும், எதைக் கேட்டாலும், 'சுதந்திரக் குழந்தை! சுதந்திரக் குழந்தை ! என்கிறார்கள். அந்தக் குழந்தைக்குப் பாலூட்டி விட்டால் மட்டும் போதாது. தாலாட்ட வேண்டும் - சொக்காய் போடவேண்டும் - விளை யாட்டு காட்ட வேண்டும் - இது அத்தனையையும் தாயே செய்துவிட முடியாது. மாமன்மார் விளையாட்டுப் பொம்கை கள் வாங்கிவர, தங்கை தாலாட்டுப் பாட, உற்றார் குழந்தை யைத் தூக்கி வைத்துக் கொஞ்ச இவ்விதம் வளர வேண்டும், அக் குழந்தை! அப்படியில்லாமல், குழந்தையை நான் தானே பெற் றேன் என்று சொல்லி 'மற்றவர் எவரும் அருகில் வரக் கூடாது.' என்று பெற்றெடுத்த தாய் சொன்னால்' குழந் தையை எவரும் சீந்தார் ! குழந்தையின் அருமை பெருமை யையும் அறியார் !! அதுபோலவே, பிறந்த சுதந்திரக் குழந் தையைச் சீராட்டி வளர்க்க, எல்லாக் கட்சிக்காரர்களுக் கும் சந்தர்ப்பம் வேண்டும், குழந்தைக்கு. அடிக்கடி உணவு