பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி. என். அண்ணாதுரை 65 ரியசின் ஆற்றலால் உயிர்தப்பிய போர் வீரர்களும், அவர் களுடைய குடும்பத்தாரும் திரண்டு வந்து நின்றனர், பெரிய தோர் நன்மையை நாட்டுக்குச் செய்த டைபீரியசையா கண்டிக்கத் துணிகிறீர்கள் - என்ன பேதமை--ஏன் இந்தப் பொறாமை! என்று ஆர்ப்பரித்தனர். இந்த எழுச்சியைக் கண்டே. கண்டனத்தை விட்டுவிட்டனர். ஆனால் சீமான் களின் சீற்றமும் பொறாமையும். புற்றுக்குள் பாம்பென இருந்துவந்தது. 1- இந்தப் போரிலே, டைபீரியஸ் வீரமாகவும் ராஜதந்திர மாகவும் பணியாற்றிப் பெரும்புகழ் பெற்றான் ஆனால் இந்தப் புகழைவிட, பயன் தரத்தக்க மற்றோர் பாடம் இந்தச் சமயத்தில் அவனுக்குக் கிடைத்தது. களம் நோக்கி அவன் சென்றதாலை. வழி நெடுக அவன் கண்ட பட்டி தொட்டிகளெல்லாம் பாழ்பட்டுக் கிடந்தன : சிற்றூர்களிலே மக்கள் இல்லை, அங்கொருவரும் இங்கொரு வருமாக அயல் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த அடிமைகள் காணப்பட்டனர். இந்தக் காட்சி, டைபீரிய சுக்குக் கருத்தளித்தது. நாடு காடாகிறது. நல்ல உழைப் பாளிகள், கிராமத்தில் வாழ வகையின்றி, வெளி இடங்களை நாடிச் சென்று விட்டனர்; காரணம், அவர்களுக்கு வயல் இல்லை. குடில் இல்லை. தொழில் இல்லை. இந்நிலைக்குக் காரணம், அவர்களிடம் இருந்த நிலமெல்லாம். செல்வர் கையிலே சிக்கிக்கொண்டதுதான். மீண்டும் நாட்டுக் குடி மக்கள் வளம்பெறவேண்டும் அறம் அதுதான், அன்பு நெறியும் அதுதான்-அரசு கொள்ளவேண்டிய முறையும் அதுதான் --- இதற்காகவே நாம் இனிப் போரிடவேண்டும். என்று டைபீரியஸ் தீர்மானித்தான். ரோம் திரும்பியதும் இந்தத் திருப்பணியைத் துவக்கினான், மக்கள் திரண்டனர். எ - 5 ―