பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி. என். அண்ணாதுரை 83 நான் மகனை இழந்தேன் - பெரும் வேதனைதான் ஆனால் நாடு. ஒரு நன்மகனை இழந்துவிட்டது. நாடு வேதனை யில் கிடக்கிறது, ஏழையர் உலகுக்குத் தன்னை அர்ப் பணித்துவிட்டான், என் மகன்-அவன் கொல்லப்பட்டது. எனக்குத்தரும் துக்கத்தைப் போலவே. ஒவ்வொரு ஏழை யின் உள்ளத்துக்கும் தரும், அவன் என் மகனாகப் பிறந் தான், நாட்டவரின் மகனானான் ! அவன் பொருட்டு துக்கிக் கும் உரிமை. எனக்கு மட்டுமல்ல, நாடு முழுவதுக்குமே வந்துவிட்டது! எனவே, அவன் மறைந்ததால் கான் மட்டுமே வேதனை அடைகிறேன் என்று கூறுவதே தவறு! நாட்டுக்கே வேதனை ! என் வேதனையைப் பெரிதெனக் கொள்ளல் கூடாது தாங்கிக்கொள்வேன் ! வேதனையைத் தாங்கிக்கொள்ளக்கூடத் தெரியாமல், டைபீரியசின் தாயார் இருக்கக் கூடாது ! நான். வீரனின் தாய்! அந்த வீரன், உயிர் இழக்கவே அஞ்சவில்லை! அவன் தாய் தான் நான் என் பதைக் காட்டவாகிலும், நான் கண்ணீரை அடக்கிக் கொள்ளவேண்டும்! என் கண்ணீரைக் கண்டால், என் மகனைச் சாகடித்த செருக்குமிக்கோர், கேலியன்றோ செய் வரி! பரிதாபம் காட்டுவர் சிலர், அது, கேலியைவிடக் கொடுமையன்றோ! • பாபம்/ கர்னீலியா கதறுகிறாள். என்ன நேரிடும் என்பதறியாது குதித்தான். கூத்தாடினான் டைபீரியஸ், இறந்துபட்டான். இதோ அவன் தாயார் அழுத படி இருக்கிறார்கள் ” என்று சுட்டிக்காட்டுவர், டைபீரிய சுக்குத் துரோகம் செய்வதாகும் இந்த நிலை, "என் மகன் பெரும்பேறு அடைந்தான். பேதைகளே! நான் கண்ணீர் விடமாட்டேன் " என்றல்லவா, டைபீரியசின் தாயார் கூற வேண்டும். அப்போதல்லவா அக்ரமக்காரர்கள் அஞ்சிச் சாவர்! அவன் சாக அஞ்சவில்லை ! என்று தெரிந்துகொள் ளட்டும், செல்வர்கள்.