________________
82 உடன்பிறந்தார் இருவர் அருமைக் குமாரனைப் பறிகொடுத்த கர்னீலியாவின் மனவேதனை சொல்லுந்தரத்ததாகவா இருந்திருக்கும்? பார்த்துப் பார்த்து மகிழ்ந்துவந்த தாய்! களம் சென்றான், கீர்த்திபெற்றான்! மக்களிடம் மதிப்புப் பெற்றான். நாட்டுக் களங்கத்தைத் துடைக்கும் திட்டம் வகுத்தான். சமுதாயத் திலே புதிய திட்டம் புகுத்த அரும்பாடுபடுகிறான். ஊரெல் லாம் புகழ்கிறது: மக்கள், மண்டிலம் வென்ற மாவீரர்களைப் போற்றுவதைவிட அவனைப் போற்றுகிறார்கள், அவன் உரை கேட்டால் மகிழ்கிறார்கள், அவனைக் கண்டால் களிப்படைகிறார்கள். அவன் சொல்லைச் சட்டமெனக் கொள்கிறார்கள். 'காப்பாளர்' பதவியே, புதுமதிப்புப் பெறுகிறது மகனால்! அப்படிப்பட்ட மகனை. மாபாவிகள் கொன்றுவிட்டார்கள். தாய் உள்ளம் எப்படித் தாங்கிக் கொள்ளும்! எவ்வளவு பதைத்திருப்பார்கள்! எவ்வளவு கதறி இருப்பார்கள்? பாவிகளே! பாதகர்காள்! என பாலகனை, பழி ஏதும் நினைத்தறியாதவனை, பிறருக்காக உழைத்து வந்தவனைக் கொன்றீர்களே! நீங்கள் வாழும் நாடு வாழுமா! என்றெல்லாம் சபித்திடத்தானே செய்வார் கள், துக்கத்தைத் துடைத்துக்கொள்ளவோ. சம்பவத்தை மறந்துவிடவோ .முடியுமா! ஆனால் கர்னீலியா. தாங்கிக்கொண்டார்கள்! அறப் போர் நடாத்தினான் நமது அருமை மைந்தன் - அற்பர்களால் கொல்லப்பட்டான் - புறமுதுகு காட்டவில்லை சாவுக்கு அஞ்சி, கொள்கையை விடவில்லை-மாவீரனாகவே இறுதி வரை இருந்தான் - அவனைக் கொன்றவர்கள் அவன் பெற்ற புகழைக் கொல்லமுடியாது - அவன் வாழ்கிறான் நினைவல் - ஏழையர் கண்ணீரில்- எளியோரின் பெருமூச்சில் வரலாற்றிலே அவன் சாகாப் பரம்பரை!- என்றெண்ணி னார்கள். என்