பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


அடக்குமுறையால் தாக்கப்பட்ட காங்கிரசிடம் மக்கள் அன்பு காட்டினர், ஆதரவு அளித்தனர்.

அடக்குமுறை நடத்திய ஆங்கில அரசு மீது ஆத்திரம் கொண்டனர்.

தேர்தலில் நிற்கும் உரிமை பறிக்கப்படாததால் அடக்குமுறைக் கொடுமைக்குப் பிறகு, காங்கிரசார் தேர்தலில் ஈடுபட்டபோது, மக்கள் ஆதரவு நிரம்பக் கிடைத்தது.