பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


சிறை சென்ற காங்கிரசார் விடுதலை அடைந்ததும், வரவேற்கப்பட்டு, பாராட்டப்பட்டு, பொதுமக்களின் ஆதரவு பெற்று, வளர முடிந்தது.

சுயராஜ்யம் எனும் மூலாதாரக் கொள்கை பற்றிப் பேசும் உரிமை இருந்து வந்ததால், புதிய ஆதரவு பெற்று, தியாகி என்ற சிறப்புப் பெற்று வெளிவந்த காங்கிரசார் சுயராஜ்யக் கொள்கை கூறித் தேர்தலுக்கு நிற்கவும், வெற்றி பெறவும், அரசு ஆளவும் அடக்குமுறைகளை அழிக்கவும் வழி கிடைத்தது.