எனவேதான், ஒரு குறிப்பிட்ட கட்டத்தின்போது சிறை செல்ல இயலாதவராக, ஒருவர் இருப்பதை, நிரந்தரமான பலகீனமென்றோ, மாறவே முடியாத இயல்பு என்றோ எண்ணிக் கொண்டு அவரால் கிடைக்கக் கூடிய வேறுபல துணைகளை, பயன்களை, இழந்திடும் முறையில், அவரை, விரட்டுவது, யூகம் ஆகாது; நியாயமும் அல்ல