பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198


அவர்களில் மிகப் பெரும்பாலோர், சிறைப்பட்டுள்ள தி. மு. கழகத்தவரிடம், உண்மையாகவோ, போலியாகவோ, பரிவு காட்டிப் பேசுகிற கட்சிக்குத் தமது வாக்குகளைத் தருவர். அந்த வாய்ப்பு, இன்று, சுதந்திரக் கட்சிக்கு இருக்கிறது. அந்தக் கட்சிதான் நமது கொள்கையை ஏற்க மறுத்த போதிலும்;