பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

இயலாது என்பதுதான் இப்போது என் எண்ணமாக இருந்துவருகிறது.

ஆர்வக்குறைவு, கஷ்டநஷ்டம் ஏற்பதிலே தளர்ச்சி, கொள்கையிலே பிடித்தமற்ற போக்கு, என்னிடம் பற்றுக் குறைவு – இவை அல்ல, பெரும்பாலானவர்கள், கடுந்தண்டனை ஏற்கத் தயங்குவதற்கான காரணங்கள்.

நமது கழகத்தில் ஈடுபடுபவர்களில், மிகப்பெரும்பாலானவர்கள் ஏழைகள், நடுத்தர வகுப்பினர், சிறுகடை நடத்துவோர், மாத ஊதியம் பெறுவோர், தினக்கூலிகள்