இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45
சிறைக்கும், தமது குடும்பங்கள் பற்றிய கவலையற்ற மனப்போக்குக் கொள்பவர்களாக கிடைக்க வேண்டும். கிடைப்பார்களா?
கிடைப்பார்கள் என்று ஆர்வம் காரணமாகக் கூறுபவர்கள், கிடைக்கவில்லை என்பதை அனுபவத்திலே காண்பார்களானால், மனம் உடையும் நிலை பெறுவர், கொள்கையிலே அவநம்பிக்கை ஏற்படும், பொதுவாழ்வு என்பதன் மீதே அருவருப்பு ஏற்படும், பொதுமக்களிடமே வெறுப்பு கொள்வர்.