பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


நமக்குப் பிறகு – அலை அலையாக மக்கள் முன்வருவர், என்பதனை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

இப்போது அந்த எழுச்சி, ஆர்வம் எழாதிருக்கலாம், ஆனால் நாமெல்லாம் சிறைப்பட்ட பிறகு, ஆர்வம் கொழுந்துவிட்டுக் கிளம்பும் என்று கூறுவார்களானால், நான் அதனை எங்கனம் ஏற்றுக் கொள்ளத் துணிவு பெற இயலும்?