இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை
❖
தமிழ்க் கவிகள் பலர் கவிதை எழுதுவார்கள். ஆனால் கவிதை பற்றிப் பேச மாட்டார்கள். கவிதை ஆக்கத்தைப் பற்றி அதன் சூட்சுமங்கள் பற்றி தனக்குள்ளும் வெளியும் நின்று கருத்துரைக்கும் பணி அபூர்வமாகவே கவிஞர்களிடம் காணப்படுகிறது. படைக்கின்றவர்களைவிட சுவைக்கின்றவர்கள்தான் கவிதையின் நீள அகலங்கள் பற்றி, ஆக்கங்கள் அர்த்தங்களாகவோ அனர்த்தங்களாகவோ ஆவது பற்றி அதிகம் பேசியிருக்கிறார்கள்.
தமிழில் மரபுக் கவிகள் காலம் வரை கவிதை விமர்சனம் கவிகளிடமிருந்து பிறக்கவில்லை. புதுக்கவிஞர்களின்