இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
அவன் உள்ளம்
அன்று நடுப்பகல் உணவை அருந்தப்
பொன்முடி மறந்து போனான் ! மாலையில்
கடைமேல் இருந்தான் ; கணக்கு வரைதல்,
இடையில் வந்தோ ரிடம்நலம் பேசுதல்,
வணிகர் கொண்டு வந்த முத்தைக்
குணம் ஆராய்ந்து கொள்முதல் செய்தல்,
பெருலா பத்தொடு பெறத்தகும் முத்து
வரின், அதைக் கருத்தொடு வாங்க முயலுதல்,
ஆன இவற்றை அடுத்ததாள் செய்வதாய்
மோனத்திருந்தோன் முடிவு செய்து,
மந்தமாய்க் கிடந்த மாலையை அனுப்பி
வந்தான் வீடு ! வந்தான் தந்தை !
தெருவின் திண்ணையிற் குந்தி
இருவரும் பேசி யிருந்தனர் இரவிலே!
12