வையம் சிலிர்த்தது. நற் புனிதை யேகி
மலைபோன்ற நீர்க்குடத்தை ஒதுங்கிச் சென்று
‘கையலுத்துப்போகு' தென்றுமரத்தின் வேர்மேல்
கடிதுவைத்தாள்; "அத்தான் நீர் மறந்தீர் என்று
மெய்யாக நான் நினைத்தேன்" என்றாள்.
[அன்னோன்,.
வெடுக்கென்று தான் அணைத்தான் " விடாதீர்"
[என்றாள்
கை இரண்டும் மெய்யிறுக, இதழ்நி லத்தில்
கனஉதட்டை ஊன்றினான், விதைத்தான்முத்தம்!
உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் உள்ள
உடலிரண்டின் அணுவனைத்தும் இன்பம் ஏறக்,
கைச்சரக்கால் காணவொண்ணாப் பெரும்பதத்தில்
கடையுகபட்டும் பொருந்திக் கிடப்ப தென்று
நிச்சயித்த மறுகணத்தில், பிரிய நேர்ந்த
நிலைநினைத்தார்; "அத்தான்” என்றழுதாள்!
[அன்னோன்"
"வைச்சேன் உன்மேல்உயிரைச் சுமந்துபோவாய்!
வரும்என்றன் தேகம். இனிப்பிரியா" தென்றான்!
"நீர்மொண்டு செல்லுபவர் நெருங்குகின்றார் ;
நினைப்பாக நாளைவா" என்று சொன்னான்.
காரிகையாள் போகலுற்றாள் குடத்தைத் தூக்கிக்
காலடி ஒன்றெடுத்து வைப்பாள் திரும்பிப் பார்ப்
[பாள்!
ஓரவிழி சிவப்படைய, அன்னோன் பெண்ணின்
ஒய்யார நடையினிலே சொக்கி நிற்பான்!
"தூரம்"எனும் ஒருபாவி இடையில் வந்தான்,
துடித்ததவர் இரு நெஞ்சும்! இதுதான் லோகம்!
11