இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5
பண்டாரத் தூது
பசுவலன் உதிப்ப தன்முன்
பண்டாரம் பூக்கொணர்ந்தான்.
புகலுவான் அவனிடத்தில்
பொன்முடி: “ஐயா, நீவிர்
சகலர்க்கும் வீடுவீடாய்ப்
பூக்கட்டி, தருகின் றீர்கள் ;
மகரளீ தியிலே உள்ள
மறை நாய்கன் வீடும் உண்டோ ?
மறைநாய்கள் பெற்ற பெண்ணாள்,
மயில்போலும் சாயல் கொண்டாள்.
நிறை மதி மூகத்தாள்; கண்கள்
நீலம் போல் பூத்திருக்கும்;
பிறைபோன்ற நெற்றி வாய்ந்தாள்;
பேச்செல்லாம் அமுதாய்ச் சாய்ப்பான்;
அறையும் அவ் வணங்கை நீவிர்
அறிவீரா? அறிவீராயின்,
14