இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சேதியொன் றுரைப்பேன் யார்க்கும்
தெரியாமல் அதனை, அந்தக்
கோதைபால் நீனீர் சென்று
கூறிட ஒப்பு வீரா ?
காதை என் முகத்தில் சாய்ப்பீர்!
கையினில் வராகன் பத்துப்
போதுதுமா ?” என்று மெல்லப்
பொன்முடி புலம்பிக் கேட்டான்!
”உன் மாமன் மறைநாய்கள் தான் !
அவன் மகள் ஒருத்தி உண்டு;
தென்னம் பானை பிளந்து
சிந்திடும் சிரிப்புக் காரி !
இன்னும் கேள் அடையானத்தை;
இடை, வஞ்சிக் கொடிபோல் அச்சம் !
நன்றாகத் தெரியும் ! நானும்
பூ அளிப்பதும் உண்” டென்றான்.
”அப்பாவும் மாம னாகும்
பூனையும் எலியும் ஆவார்;
அப்பெண்ணும் நானும் மெய்யாய்
ஆவியும் உடலும் ஆனோம்!
செப்பேத்தி அவள் துறைக்குச்
செல்லுங்கால்,சென்று காண
ஒப்பினேன் ! கடைக்குப் போக
உத்தர வீட்டார் தந்தை !
15