இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
“அவள் ஒரு வெள்ளை நூல்போல்
ஆய்விட்டாள்” என்று சொன்னான்.
”அவுஷதம் கொடுக்க வேண்டும்
அடக்” கென்றான் செம்மல்! பின்னும்.
”கவலை தான் அவள் நோய்” என்று
பண்டாரம் கட்டவிழ்த்தான்.
”கவடில்லை உன் தாய்க்” கென்று
கவசம் செய் ததனை மூடிக்,
”கணக்கரே ஏன் நிற்கின்றீர்?
பின்வந்து காண்பீர் என்றான்
கணக்கரும் போக லானார்;
கண்ட அப்பண்டாரந்தான்,
அணங்குக்கும் உனக்கும் வந்த
தவருக்குந் தானே என்றான்,
குணமிலா ஊர்க் கதைகள்
கூறாதீர் என்று செம்மல்,
பண்டாரந் தனைப் பிடித்துப்
பரபர என இழுத்துக்
கொண்டேபோய்த் தெருவில் விட்டுக்,
”குறிப்பறி யாமல் நீவிர்
குண்டானிற் கவிழ்ந்த நீர்போல்
கொட்டாதீர்” என்றான். மீண்டும்
பண்டாரம், கணக்கர் தம்மைப்
பார்ப்பதாய் உள்ளே செல்ல,
30