இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9
நுணுக்க மறியாச் சணப்பன்
பொன்முடி படித்த பின்னர்ப்
புன்சிரிப்போடு சொல்வான்:
“இன்றைக்கே இப்போதே ஓர்
பொய்த்தாடி எனக்கு வேண்டும்,
அன்னத னோடு மீசை
அசல் உமக்குள்ள தைப்போல்
முன்னே நீர் கொண்டு வாரும்
முடிவுசொல் வேன் பின்“ என்றான்.
கணக்கர்கள் அவன் சமீபம்
கை கட்டி ஏதோ கேட்க
வணக்கமாய் நின்றி ருந்தார்;
வணிகர் சேய் கணக்கர்க் கஞ்சிச்
சணப்பன் பண்டாரத் தின் பால்
சங்கதி பேசவில்லை.
நுணுக்கத்தை அறியா ஆண்டி
பொன்முடி தன்னை நோக்கி,
29