பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

நுணுக்க மறியாச் சணப்பன்


பொன்முடி படித்த பின்னர்ப்
புன்சிரிப்போடு சொல்வான்:

“இன்றைக்கே இப்போதே ஓர்
பொய்த்தாடி எனக்கு வேண்டும்,

அன்னத னோடு மீசை
அசல் உமக்குள்ள தைப்போல்

முன்னே நீர் கொண்டு வாரும்
முடிவுசொல் வேன் பின்“ என்றான்.

கணக்கர்கள் அவன் சமீபம்
கை கட்டி ஏதோ கேட்க

வணக்கமாய் நின்றி ருந்தார்;
வணிகர் சேய் கணக்கர்க் கஞ்சிச்

சணப்பன் பண்டாரத் தின் பால்
சங்கதி பேசவில்லை.

நுணுக்கத்தை அறியா ஆண்டி
பொன்முடி தன்னை நோக்கி,

29