தலைக்கோழி கூவிற்று! முதலில் அந்தத்
தையல்தான் அதைக்கேட்டாள். எழுந்திருந்தாள்
கலைக்காத சாத்துபடிச் சிலையைப் போலே
கையோடு செம்பில்நீர் ஏந்தி ஓடி,
விலக்கினாள் தாழ்தன்னை! வாசல் தன்னை
விளக்கினாள் நீர் தெளித்து! வீதி நோக்கக்
குலைத்ததொரு நாய் அங்கே! சரிதான் அந்தக்
கொக்கு வெள்ளை மேல் வேட்டிப் பண்டாரந்தான்
என்று மனம் பூரித்தாள், திருவிழாவே
எனைமகிழ்ச்சி செய்ய நீ வாவா என்று
தன் முகத்தைத் திருப்பாமால் பார்த்திருந்தாள்
சணப்பனா? குணக்குன்றா? வருவதென்று
தன் உணர்வைத் தான் கேட்டாள் ! ஆளன்
வந்தான்:
தகதகெனக் குதித்தாடும் தனது காலைச்
சொன்னபடி கேள் என்றாள். பூரிப்பெல்லாம்
துடுக்கடங்கச் செய்துவிட்டாள். "அத்தான்"
என்றாள்?
"ஆம்" என்றான். நடைவீட்டை அடைந்தார்!
அன்னை
அப்போது பால் கறக்கத் தொடங்குகின்றாள்.
தாமரை போய்ச் சந்தனத்தில் புதைந்ததைப்
போல்
தமிழ்ச்சுவடிக் கன்னத்தில் இதழ் உணர்வை
33
3—3558