பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நேமமுறச் செலுத்தி நறுங் கவிச்சு வைகள்
நெடுமூச்சுக் கொண்டமட்டும் உரிஞ்சி நின்று

மாமியவள் பால்கறந்து முடிக்க, இங்கு
மருமகனும் இச்சென்று முடித்தான் முத்தம்!

பூமுடித்த பொட்டணத்தை வைத்துச் சென்றான்.
பூங்கோதை குழல் முடித்துப் புகுந்தாள் உள்ளே!

நீ முடித்த வேலையென்ன என்றாள்' அன்னை!
நெடுங்கயிற்றை தலைமுடித்துத் தண்ணீர்
                                    மொண்டேன்.
ஆ முடித்த முடியவிழ்த்துப் பால் கறந்தீர்;
அதை முடித்தீர்; நீர் தௌித்து முடித்தேன்,
                                     இன்னும்
ஈ முடித்த தேன்கூட்டை வடித்தல் போலே
எனை வருத்தாதீர் என்றாள் அறைக்குள்
                                  சென்றாள்.

34