இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தப்பிய சிற்சில தமிழர், வனத்தின்
அப்புறத் துள்ள அழகிய ஊரின்
பின்புற மாகப் பிரியும் வழியாய்ப்
பொன்முடி யோடு போய்ச் சேர்ந்தார்கள்.
சூறை யாடிய துறவிகள் அங்கே
மாறு பாட்டு மனத்தொடு நின்று,
"வைதிம் பழித்த மாபாவி தப்பினான்;
பைதலி வனத்தின் பக்க மாகச்
செல்லுவான் அந்தத் தீயவன்; அவனைக்.
கொல்லும் வண்ணம் கூறிச் சயந்தனை
அனுப்பி வைப்போம் வருவீர்
இளிதில் லாதீர் என்று போனாரே.
58