பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"நிச்சயமாய் அவர்தாம்" என் றுறைந்தாள்
                                    [மங்கை!
"நிசம்" என்றாள்! பூரித்தாள்! மெல்லி டைமேல்
கொச்சவலம் இறுக்கினாள்! சிரித்தாள் கைகள்
கொட்டினாள்! ஆடினாள்! ஓடலானாள்.
"பச்சை மயில்; இங்கெங்கே! அடடாஎன்னே!
பறந்துவந்து விட்டாளே! அவள்தான்" என்று,
கச்சைதனை இறுக்கி எதிர் ஓடிவந்தான்.
கடிதோடி னாள் அத்தான் என்ற ழைத்தே!
நேர்ந்தோடும் இருமுகமும் நெருங்கும் போது
நெடுமரத்தின் மறைவினின்று நீள் “வாள் ஒன்று
பாய்ந்ததுமேல்! அவன் முகத்தை அணைத்தாள்
                                        [தாவிப்,
பளீரென்று முத்தமெரன்று பெற்றாள்! சேயின்
சாந்தமுகந் தனைக்கண்டாள் உடலைக் காணாள்!
தலைசுமந்த கையோடு தரையிற் சாய்ந்தாள்!
தீந்தமிழர் உயர்வினுக்குச் செத்தான்! அன்பன்
செத்ததற்குச் செத்தாள் அத்தென்னாட்டன் னம்!

60