பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


குருபரனுக் கருள்புரிந்தான்


கயிலாச புரத்தில் நல்ல
சண்முகக் கவிரா யர்க்கும்.

மயில்நிகர் சிவகா மிக்கும்
வாயிலாப் பிள்ளை யாக

அயலவர் நகைக்கும் வண்ணம்
குருபரன் அவதரித்தான்.

துயரினால் செந்தூர் எய்திக்
கந்தனைத் துதித்தார் பெற்றோர்;

தாற்பது நாளில் வாக்கு
நல்காயேல் எங்கள் ஆவி

தோற்பது திண்ண மென்று
சொல்லியங் கிருக்கும் போது.

வேற்படை முருகப் பிள்ளை
குருபரன் தூங்கும் வேனை,

சாற்றும்அவ் வூமை நாவிற்
சடாட்சரம் அருளிச் சென்றான்

64