பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழிவாம் குறுநெறியா ரேனும், பழிக்குப்
பழிவாங் குதல்சைவப் பாங்குக்—கிழிவாம்!

வடநாட்டில் சைவம் வளர்ப்போம்! கொலையின்
நடமாட்டம் போரும்! நமனைக்—கெடமாட்டும்

தாளுடையான் தண்ணருளும் சார்த்ததுகண்
                                    [டோம்; நம்மை
ஆளுடையான் செம்மை அருள்வாழி!—கேளீர்,

குமர குருபரன் ஞான குருவாய்
நமை யடைந்தான் நன்றிந்த நாள்!

63