இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2
நீராடு பெண்ணினத்தாரோடு, பூங்கோதை
வள்ளியூர்த் தென்புறத்து
வசனப் பூம் பொய்கை தன்னில்
வெள்ள நீர் தளும்ப, வெள்ள
மேலெலாம் முகங்கள், கண்கள்;
எள்ளுப் பூ நாசி, கைகள்
எழிலொடு மிதக்கப், பெண்கள்
தெள்ளு நீ ராடு கின்றார்!
சிரிக்கின்றார்! கூவுகின்றார்!
பச்சிலைப் பொய்கை யான
நீலவான் பரப்பில் தோன்றும்
கச்சித முகங்களென்னும்
கறையிலா நிலாக்கூட்டத்தை
அச்சமயம் கிழக்குச்
சூரியன் அறிந்து நாணி
உச்சி ஏறாது நின்றே
ஒளிகின்றான் நொச்சிக் குப்பின்!
6