பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தெய்வப் பாடல்

குமரகு ருபரன் பாடல்
கூறிப்பின் பொருளும் கூறி,

அமரரா தியர்வி ருப்பம்
ஆம்படி செய்தான் ; மற்றோர்

அமுதப்பாட் டாரம் பித்தான்.
அப்பாட்டுக் கிப்பால் எங்கும்

சமான மொன் றிருந்த தில்லை
சாற்றுவோம் அதனைக் கேட்பீர் ;

தொடுக்கும் கடவுட் பழம்பாடற்
றொடையின் பயனே ! நறைபழுத்த

துறைத்தீந் தமிழின் ஒழுகும்நறுஞ்
சுவையே! அகந்தைக் கிழங்கை அகழ்ந்

தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்
கேற்றும் விளக்கே! வளர்சிமைய

இமயப் பொருப்பில் விளையாடும்
இளமான் பிடியே ! எறிதரங்கம்,

69