இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28
தெய்வப் பாடல்
குமரகு ருபரன் பாடல்
கூறிப்பின் பொருளும் கூறி,
அமரரா தியர்வி ருப்பம்
ஆம்படி செய்தான் ; மற்றோர்
அமுதப்பாட் டாரம் பித்தான்.
அப்பாட்டுக் கிப்பால் எங்கும்
சமான மொன் றிருந்த தில்லை
சாற்றுவோம் அதனைக் கேட்பீர் ;
தொடுக்கும் கடவுட் பழம்பாடற்
றொடையின் பயனே ! நறைபழுத்த
துறைத்தீந் தமிழின் ஒழுகும்நறுஞ்
சுவையே! அகந்தைக் கிழங்கை அகழ்ந்
தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்
கேற்றும் விளக்கே! வளர்சிமைய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமான் பிடியே ! எறிதரங்கம்,
69