பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

திருவடி சரணம்.


முழுதுநூல் அங்கேற்றிப் பின்
முடிமன்னன், குதிரை யானை,
பழுதிலாச் சிவிகை செம்பொன்
காணிக்கை பலவும் வைத்துத்
தொழுதனன், குருபரன் பின்,
துதிநூலும் நீதி நூலும்
எழுதிய அனைத்தும் தந்தே
சின்னாட்கள் இருந்து பின்னே,

தம்பியை இல்லம் போக்கித்,
தான், சிராப் பள்ளி யோடு
செம்மைசேர் ஆனைக் காகவும்
சென்று, பின் திருவா ரூரில்
பைம்புளற் பழனத் தாரூர்
நான்மணி மாலை பாடி
நம்மைவந் தடைந்த காலை
நாமொரு கேள்வி கேட்டோம்.

72