பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


6
சேரி வாசனை


ண்வாசனையை வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட நான் இப்போது சென்னை நகருக்கு உங்களை இழுத்துக் கொண்டு போகலாம் என்று நினைக்கிறேன். நான் வேண்டும் என்றுதான், அழைத்துக் கொண்டு என்று சொல்லாமல், இழுத்துக்கொண்டு என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறேன். காரணம், சேரியின் பின்னணியோ சின்னான், மங்கம்மா போன்ற பெயர்களோ, வருகின்ற கதைகளை மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த நாம் விரும்பிப் படிப்பதில்லை. என்னுடைய துரதிருஷ்டம் நான் யாருக்காக கதை எழுதுகிறேனோ அவர்கள், என் கதைகளைப் படிக்கும் நிலையில் இல்லை. ஆனாலும், வாசக நண்பர்கள், நண்பர் வட்டத்தில் நான் மூச்சுவிட்ட மண்வாசனையை தாங்களும் பகிர்ந்து கொண்டதுபோல் தோன்றுவதால், இப்போது சேரிவாசனைக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்.