பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

வாழ்க்கையிலே ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கிக் கொள்வதற்கு குறள் துணைபுரிகிறது!

குறளை, வழிகாட்டியாகக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

வாழ்க்கைக்கு திருவள்ளுவர் காட்டிய நெறியையும், புறநாநூறு காட்டிய வீரத்தையும், அகத்துறை காட்டிய அன்பையும் வருங்காலத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு, இதுபோன்ற மன்றங்கள், செய்யும் பணி, பாராட்டுதற்குரியது. இதற்கு நீங்கள் அதிக அளவில் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.