பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்களைப் பற்றிய கேள்வி நீதி மன்றங்களில் எழுந்தது. அதன் காரணமாக அவர் ஏற்கனவே நடந்துவிட்ட சுயமரியாதைத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார்.

ஆனால் இன்று காமராசர் ஆட்சியில் இதனை ஏற்கனவே நடந்த திருமணங்கள் மட்டுமல்லாமல் இனி நடக்கும் சுயமரியாதைத் திருமணங்களும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற முறையில் மாற்றியமைக்கத் திட்ட மிட்டுள்ளனர்.

இதன் மூலம் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப் படி செல்லாது என்று பேசி வந்த நிலைமை அடியோடு மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமணங்களுக்குச் சட்டத்தின் பாதுகாப்பும் ஏற்பட்டு விட்டது.

இதுவரையில் நாம் சட்டம் ஒப்புகிறதா? இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை, சமூகம் மக்கள் மனந்திருந்துகிறார்களா? என்பதை மட்டுந்தான் கவனித்துச் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வந்தோம். நாம் எதற்கும் அஞ்சாது தொடர்ந்து இத்தகைய பணியினைச் செய்து வந்ததன் பயன்தான் இப்பொழுது சட்டம் நம்மைத் தேடி வந்து நமக்குப் பாதுகாப்புத்தரும் நிலைமை ஏற்பட்டு விட்டது.

இதே முறையில் நாம் நாடு முழுவதும் பேசியும், எழுதியும் பிரச்சாரம் செய்து வந்த மற்றொரு காரியமும் இன்று சட்டமாகி வருகிறது. நாம் தான் கேட்டோம் முதன் முதலில் ஒரு ஆண் பல மனைவியரை மணந்து கொள்வது நியாயமா ? என்று.

அவனுக்கென்ன ஆண்மகன்! ஒன்னென்ன ஒன்பது. மனைவிகளைக்கூட கட்டி ஆளலாம்! என்று பெருமை