பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

வாய்ப்பினை பெற்றேன்! பயங்கரமான பெரிய கட்டிடமான நீதிமன்றத்தில் நுழைந்த பிறகு இந்தத் தமிழ் ஆர்வத்தை குறைத்துக் கொள்வார்களோ என்று ஐயப்பட்டேன்!

இன்று நீதிபதி அவர்கள் நீதிமன்றத்தில் எழுப்புகின்ற வினாவைப்போல, சில வினாக்களை எழுப்பி நான் பதில் சொல்லவேண்டுமென்று கேட்டிருக்கிறார்.

நீதிபதியின் வினா எப்போதுமே ஆபத்தானது என்பதை வழக்கறிஞர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்!

யூகம் அதிகமுள்ள வழக்கறிஞர்களால் அதை புரிந்து கொள்ள முடியும்! நீதிமன்றங்களில் சில வழக்கறிஞர்கள் எதை எதைச் சொல்லக்கூடாது என்று நினைக்கிறார்களோ அதையெல்லாம் நீதிபதி தங்களின் வினாவினால் சொல்ல வைக்கவும் செய்யலாம்! நம் தலைவர் அமர்ந்திருப்பது நீதி மன்றமும் அல்ல. தமிழ் குற்றக் கூண்டிலே நிற்கவும் இல்லை. நானும் தைரியமாகவே பதில் சொல்லலாம், யாரும் பயப்பட தேவையுமில்லை!

இந்த விழாவிலே கலந்து கொள்வதற்கு முன்னாலே எனக்கு திகைப்பு இருந்தது! என்ன திகைப்பு என்று நீங்கள் கேட்கக்கூடும்!

நண்பர் கோகுல கிருஷ்ணன் சந்தித்து தமிழ் இலக்கியத்தைபற்றி பேச வேண்டுமென்று சொன்ன நேரத்தில், எனக்கு திகைப்பு ஏற்பட்டது. நான் தமிழ் இலக்கியம் அதிகம் படிக்காதவன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்!

டாக்டர் சிதம்பரனாதன் செட்டியார் அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். நான் இங்கு தமிழ் இலக்கியத்தை பற்றி பேசுவதென்பது, மாணவன் படித்தவைகளை ஆசிரியர் முன்னே சொல்லுவதைப் போலாகும்!