பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

வெட்டுவகையினிசை காரணத்துப்
பட்டவகை தன் சேவியினோர்த்
தேவலன் பின் பாணியாதெனக்
கோவலன் கையாழ் நீட்ட

கோவலன், யாழை மீட்டி இசைபாடி, இன்புற்றான்!

வார்தல்:-சுட்டு விரற் செய் தொழில்.

வடித்தல் :- சுட்டு விரலும் பெரு விரலுங் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல்.

உந்தல்:- நரம்புகளை உந்தி, வலிவிற் பட்டதும், மெலிவிற் பட்டதும், நிரல் பட்டதும், நிரவிழிப்பட்டதும் என்றறிதல்.

உறழ்தல்:- ஒன்றிடை யிட்டும், இரண்டிடை யிட்டும் ஆராய்தல்,

என்று மேற்படி செய்யுளில் வரும் பதங்கட்கு. அடியார்க்கு நல்லார் தரும் பொருளைப் படித்துவிட்டுப் பிறகு தமிழின் இசை உள்ளமும், இசை வளமும் எங்ஙனம் இருந்தது என்பதை ஆரியத் தோழர்கள் அறியட்டும்.

இசைக் குழல்கள் எண்ணற்றன இருந்த இடம் இது! இங்கு இசை பயின்று, இசை நுணுக்க முணர்ந்து, ஏழிசையைப் பாடி வாழ்ந்தவரே தமிழர்.

சிறு வயது முதலே, இசையே தமிழரின் தோழன்.

ஊசல் வரி, கந்துவரி, ஆற்றுவரி, கானல் வரி முதலியன இன்று தமிழருக்கு வெறும் சொற்றொடர்கள்; முன்னாளில், அவைகள் இனிய இசைகள்! இசை என்னும் சொல்லுக்கே வயப்படுத்துவது, இசைவிப்பது என்பது பொருள். இதனைத்தமிழர்