பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224


பிள்ளை விளையாட்டு

புளிமூட்டை ராமசாமி நன்றாகப் பாடுவார். கதா காலட் சேபம் செய்வார். வடமொழியில் உள்ள மந்திரங்கள் பலவற்றை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். நாங்கள் எல்லோரும் காலையில் அமராவதி ஆற்றுக்குப் போய் குளிப்பது வழக்கம். போகும்போது நான், என். எஸ். கிருஷ்ணன், புளிமூட்டை ராம சாமி, எஸ். வி. சகஸ்ரநாமம், மற்றொரு நகைச்சுவை நடிகர் சுந்தரம் ஐயர் எல்லோரும் ஒன்றாகக் கையைக் கோர்த்துக் கொண்டு வீதியில் மந்திரங்களை முழக்கிக் கொண்டே போவோம்.

"சன்னோ மித்ரசம் வருணஹ
சன்னை யவத் துரியமாம்
சன்ன இந்த்ரோ
பிருஹஸ் பதிஹி"

என இவ்வாறு நாங்கள் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு போவதை வீதியில் அனைவரும் பார்த்துச் சிரிப்பார்கள். சில பிரா மணர்கள், இதைப் பிள்ளை விளையாட்டாகக் கருதாமல் தங்களைக் கேலி செய்வதாக எண்ணிப் பெரியண்ணாவிடம் புகார் செய்தார் கள். இதன் பிறகு மந்திரங்களை வீதியில் சொல்லக் கூடாதென்று எங்களுக்குத் தடையுத்திரவு போடப்பட்டது.